உள்ளூர் செய்திகள்

சுகாதாரப்பணிகள் குறித்து கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு செய்தார்.

திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு

Published On 2023-03-03 10:00 GMT   |   Update On 2023-03-03 10:00 GMT
  • ரூ. 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை பார்வையிட்டார்.
  • கழிவுநீர் தடையின்றி தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

திருவாரூர்:

திருவாரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரபணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் மாவட்ட அவர் கூறியதாவது:-

திருவாரூர் மருத்து வக்கல்லூரி மருத்துவ மனையில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சார்பில் இயங்கிவரும் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தினை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, மருத்துவக்கல்லூரியில் தேசிய நகர்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் பார்வையாளர்கள், உடன் தங்கும் நபர்கள் தங்குவதற்காக ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் கட்டுப்பட்டுள்ள கட்டட த்தினை பார்வையிட்டார்.

பின்னர், மருத்துவ மனையில் ஒருங்கிணைந்த பேறுகால அவசர சிகிச்சை மற்றும் சிசு தீவிர சிகிச்சை பராமரிப்பு மையத்தை ஆய்வு செய்தார்.

மருத்துவக்கல்லூரியில் கழிவுநீர் செல்லும் வடிகா லினை பார்வையிட்டு, கழிவுநீர் தடையின்றி தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்குமாறு உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, திருவாரூர் அரசு மருத்து வக்கல்லூரி முதல்வர் ஜோசப்ராஜ் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News