உள்ளூர் செய்திகள் (District)
- கல்லூரி மாணவி கீர்த்திகா சம்பவத்தன்று எலி மருந்து தின்று மயங்கி விழுந்தார்.
- அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கீர்த்திகா பரிதாபமாக இறந்தார்.
நெல்லை:
நெல்லை சந்திப்பு சி.என்.கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகள் கீர்த்திகா (வயது 18). கல்லூரி மாணவி.
சம்பவத்தன்று அவர் எலி மருந்து தின்று மயங்கி விழுந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வண்ணார் பேட்டையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி இன்று கீர்த்திகா பரிதாபமாக இறந்தார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என சந்திப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.