உள்ளூர் செய்திகள் (District)

கோவை வடவள்ளியில் கல்லூரி மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2022-06-07 09:14 GMT   |   Update On 2022-06-07 09:14 GMT
  • மாணவி ஏற்கனவே ஒருமுறை விஷம் குடித்து தற்கொலை முயன்றுள்ளார்.
  • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடவள்ளி,

கோவை வடவள்ளி சிபிஆர் அபார்ட் மெண்ட் சுப்பிரமணியம் நகர் பகுதியில் வசிப்பவர் பிரேம்குமார். இவர் பங்கு சந்தை முதலீடு செய்து வேலை செய்து வருகிறார்.

இவரது மகள் நந்தினி (19) தஞ்சை மாவட்டத்தில் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பி.டெக் பயின்று வருகிறார். ேநற்றுமுன்தினம் இரவு தனது தாயாரிடம் குடிப்பதற்கு பழச்சாறு வேண்டும் என்று கேட்டுள்ளார். அந்த சமயத்தில் தனது படுக்கை அறையில் சென்று தாளிட்டுக் கொண்டார்.

நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் புவனேஸ்வரி தனது கணவர் பிரேம்குமாரை தொலைபேசி யில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அவர் விரைந்து வந்து கதவை உடைத்து பார்க்கையில் துப்பட்டாவில் நந்தினி தூக்கு போட்டு தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கே சிகிச்சை பலனின்றி நந்தினி பரிதாபமாக இறந்தார்.

கல்லூரி விடுப்பில் பெற்றோர் வீட்டிற்கு வந்த மாணவி படிப்பதற்கு சிரமமாக இருப்பதாக கூறி உள்ளார். இதைத் தொடர்ந்தே அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக பிரேம்குமார் வடவள்ளி போலீஸ்நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நந்தினி ஏற்கனவே ஒருமுறை விஷம் குடித்து தற்கொலை முயன்றுள்ளார். அப்போது ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று உயிர் தப்பினார். தற்போது தூக்கில் தொங்கி உயிரை மாய்த்துக் கொண்டார்.

Tags:    

Similar News