உள்ளூர் செய்திகள்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம்.

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கொடைக்கானலில் ஆர்ப்பாட்டம்

Published On 2023-07-22 04:54 GMT   |   Update On 2023-07-22 04:54 GMT
  • மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
  • கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி, காங்கிரஸ், ம.தி.மு.க. ,விடுதலை சிறுத்தை கட்சி, ஒருங்கிணைந்த கிறிஸ்துவ கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கொடைக்கானல்:

மணிப்பூர் மாநிலத்தில் 2 பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்ற சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூர செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் மற்றும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சி, காங்கிரஸ், ம.தி.மு.க. ,விடுதலை சிறுத்தை கட்சி, ஒருங்கிணைந்த கிறிஸ்துவ கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளை சேர்ந்த உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த முடியாத மத்திய, மணிப்பூர் மாநில அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர் .

கலவரத்தை தூண்டும் வகையில் பெண்களை இழிவு படுத்திய நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News