உள்ளூர் செய்திகள்

முன்விரோதம் காரணமாக மோதல்; 5 பேர் கைது

Published On 2023-06-06 09:38 GMT   |   Update On 2023-06-06 09:38 GMT
  • அவர் பின்னால் 17 வயது மகன், பருக் ஆகிய 2 பேர் துரத்தி கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.
  • இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்ததாளப்பள்ளி அருகே உள்ள துரிஞ்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லம் (வயது 32). கூலி தொழிலாளி. அதேபோல் காட்டிகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்தர் அப்துல் மாலிக். இவருடைய மகன்கள் 17 வயது மகன், பருக் (20). இரு குடும்பத்தி னரிடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

சம்பவத்தன்று செல்வம் இருசக்கர வாகனத்தில் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் 17 வயது மகன், பருக் ஆகிய 2 பேர் துரத்தி கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.

இந்நிலையில் செல்வம் கொடுத்த புகாரின் பேரில் பருக், சாத்து ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் சாத்து கொடுத்த புகாரின் பேரில் செல்வம் (32), மாது (50), நிர்மல் ஸ்ரீ (21) ஆகியோரை கைது செய்து செய்தனர். இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

Tags:    

Similar News