உள்ளூர் செய்திகள் (District)

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

கர்நாடக தேர்தலில் காங்கிரஸ் வெற்றி: தஞ்சையில் காங்கிரசார் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

Published On 2023-05-14 09:13 GMT   |   Update On 2023-05-14 09:13 GMT
  • கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து சாதனை படைத்துள்ளது.
  • தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டன.

தஞ்சாவூர்:

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 136 தொகுதிகளில் வெற்றி பெற்று அறுதிப்பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்து சாதனை படைத்துள்ளது.

இதனை நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

அதன்படி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தின் முன்பு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு க்கள் வழங்கப்பட்டன.

பின்னர் தஞ்சாவூர் வடக்கு வீதி மற்றும் மாநகராட்சியில் உள்ள தேசத்தந்தை காந்தி சிலை, கீழவாசலில் உள்ள காமராஜர் சிலை, மிஷின் தெருவில் உள்ள அன்னை இந்திராகாந்தி சிலை ஆகிய சிலைகளுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் டாக்டர் து.கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமை வகித்து அனைவ ருக்கும் இனிப்புக்கள் வழங்கி காங்கிரஸ் தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்தார்.

மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் வக்கீல் கோ.அன்பரசன், மாவட்ட பொதுச்செயலாளர் மோகன்ராஜ், மாநகர, மாவட்ட துணைத் தலைவர் செந்தில் நா.பழனிவேல், மாவட்ட ஊடகப்பிரிவுத் தலைவர் பிரபு மண்கொண்டார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்ச்சியில் வட்டாரத் தலைவர் ரவிச்சந்திரன், மேல உளூர் சிவானந்த வாண்டையார், மாநில பேச்சாளர் பால குலோத்துங்கன், மகளிர் பிரிவைச் சேர்ந்த சசிகலா, சாந்தாராமதாஸ், கலைச்செல்வி, சுவிதா ஞானப்பிரகாசம், மாவட்ட கலை இலக்கியப் பிரிவுத் தலைவர் கலைச்செல்வன், அருண்சுபாஷ், சிவக்குமார், பாரத், மணிகண்டன், துரைராஜ், இளைஞர் காங்கிரஸ் மாநகர, மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, சண்முகம், கோபாலய்யர், கல்விராயன்பேட்டை கருணாநிதி, ராமச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News