உள்ளூர் செய்திகள்

ஓடும் பேருந்தில் பெண்ணிடம் தகராறு கட்டிட தொழிலாளி கைது

Published On 2023-03-17 07:25 GMT   |   Update On 2023-03-17 07:25 GMT
  • ஆரூர்பட்டி கிராமம், சேடப்பட்டி வாடன்வளவு பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி குடி போதையில் தகராறு செய்தார்.
  • இதுபற்றி கோகிலா கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

தாரமங்கலம்:

தாரமங்கலம் அருகி லுள்ள ஆரூர்பட்டி கிராமம், சேடப்பட்டி வாடன்வளவு பகுதியை சேர்ந்த மாதையன் மனைவி கோகிலா (வயது 33). இவர் வேலைக்கு சென்றுவிட்டு தாரமங்க லத்தில் இருந்து அரசு பேருந்தில் வீட்டிற்கு சென்றார்.

அப்போது அதே பேருந்தில் வந்த மேட்டு மாறனுர் பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சுரேஷ் (22) குடி போதையில் கோகி லாவிடம் தகராறு செய்தார். இதனால் பேருந்து நடத்து னர் சுரேசை மேட்டுமாரனுர் பகுதியில் கீழே இறக்கி விட்டு சென்றுள்ளார். இத னால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் அடுத்த நாள் கோகி லாவிடம் சென்று தகராறு செய்து கத்தியை காட்டி மிரட்டல் விடுத்துள்ளார். இதுபற்றி கோகிலா கொடுத்த புகாரின் பேரில் தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

Tags:    

Similar News