உள்ளூர் செய்திகள் (District)
குன்னூர் கன்டோண்மென்ட் பகுதியில் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
- தூய்மை பணியாளர்கள் 150 க்கு மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
- இதனால் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள 7 வார்டுகளிலும் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
அருவங்காடு,
குன்னூர் அருகே உள்ள கண்டோன்மென்ட் பகுதி மத்திய ராணுவ கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. இப்பகுதிகள் 7 வார்டுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த வார்டுகளில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள் 150 க்கு மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் சம்பள உயர்வு கோரி ஒப்பந்த ஊழியர்கள் கோரிக்கை விடுத்ததால் 8 ஊழியர்களை ஒப்பந்ததாரர் பணி நீக்கம் செய்துள்ளார். இதனை கண்டித்து ஒப்பந்த ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள 7 வார்டுகளிலும் துப்புரவு பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.