உள்ளூர் செய்திகள்

பென்னாகரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.2.49 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

Published On 2023-07-08 09:39 GMT   |   Update On 2023-07-08 09:39 GMT
  • ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்தாண்டில் பருத்தி ஏலம் தொடங்கப்பட்டுள்ளது.
  • குறைந்தபட்ச விலையாக குவிண்டாலுக்கு 5800 ரூபாயும் மற்றும் சராசரி விலையாக குவிண்டாலுக்கு ரூ.6109 ரூபாய் என ஏலம் நடைபெற்றது.

பென்னாகரம்,

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் கீழ் செயல்படும் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இந்தாண்டில் பருத்தி ஏலம் தொடங்கப்பட்டுள்ளது.

விற்பனைக் கூடத்தில் நேற்று மறைமுக பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் பென்னாகரம் மற்றும் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 15 விவசாயிகள் கலந்துகொண்டு 114 பருத்தி மூட்டைளை விற்பனைக்குக் கொண்டு வந்தனர்.

ஒழுங்குமுறை விற்பனைக் கூட மேற்பார்வையாளர்கள் வீரன், சக்திவேல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற மறைமுக பருத்தி ஏலத்தில் பாப்பாரப்பட்டி மற்றும் பென்னாகரம் பகுதி வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

இதில் அதிகபட்ச விலையாக குவிண்டாலுக்கு 6209 ரூபாயும், குறைந்தபட்ச விலையாக குவிண்டாலுக்கு 5800 ரூபாயும் மற்றும் சராசரி விலையாக குவிண்டாலுக்கு ரூ.6109 ரூபாய் என ஏலம் நடைபெற்றது.

மொத்தமாக 4075 கிலோ எடையுள்ள பருத்தி 2,49,012 ரூபாய்க்கு (இரண்டு லட்சத்து 49 ஆயிரத்து 12 ரூபாய்க்கு)ஏலம் நடைபெற்றது.

Tags:    

Similar News