உள்ளூர் செய்திகள்
மின்மாற்றிகளை சேதப்படுத்தி 600 கிலோ காப்பர் கம்பிகள் திருட்டு
- கிராமங்களில் உள்ள மின்மாற்றிகளை மர்மநபர்கள் சேதப்படுத்தி அதில் இருந்த சுமார் 600 கிலோ காப்பர் கம்பிகளை திருடிச்சென்றனர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பர் கம்பிகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி:
சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியம் அருகே அலியாபாத், காட்டு எடையார் பாளையம் மற்றும் காட்டுசெல்லூர் ஆகிய கிராமங்களில் உள்ள மின்மாற்றிகளை மர்மநபர்கள் சேதப்படுத்தி அதில் இருந்த சுமார் 600 கிலோ காப்பர் கம்பிகளை திருடிச்சென்றனர். இது குறித்து ஜி.அரியூர் மின்வாரிய இளமின்பொறியாளர் கிருபாகரன் ரிஷிவந்தியம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இது குறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து காப்பர் கம்பிகளை திருடிச்சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.