உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு கூட்டம் நடைப்பெற்றது

பட்டியலின வெளியேற்ற விழிப்புணர்வு கூட்டம்

Published On 2022-09-12 09:30 GMT   |   Update On 2022-09-12 09:30 GMT
  • தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து வள்ளுவர் குல சமுதாயத்தை மாற்ற வேண்டும் என வலியுறுத்தல்.
  • ஓபிசி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவிலில் நாகை வள்ளுவர் குல சங்கம், மயிலாடுதுறை மற்றும் வள்ளுவர் குல பண்பாட்டு விழிப்புணர்வு பேரியக்கம் இணைந்து பட்டியல் இன வெளியேற்ற விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள திருவள்ளுவர் குல மக்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய வள்ளுவர் குல நிர்வாகிகள் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்து வள்ளுவர் குல சமுதாயத்தை மாற்ற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தினார்கள்.

பிறவி ஞானமும், கல்வி அறிவியலில் சிறந்து விளங்கும் திருவள்ளுவர் சமுதாய மக்களை பட்டியலில் இருந்து வெளியேற்றி அவர்களின் தனி சிறப்பை போற்றுகிற வகையில் ஓபிசி பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வள்ளுவர் குலத்தின் வரலாற்று பெருமைகளையும் பண்பாட்டு வாழ்வியலிலும் நமது சமுதாய வரலாற்று ஆதாரங்களை உலகறிய செய்திட புலனறிதல் குழுவும் வலைக்காட்சி மற்றும் இணையதளம் பரப்புரையினை செய்திட தீர்மானிக்கப்பட்டது.

Tags:    

Similar News