உள்ளூர் செய்திகள்

பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-06 09:49 GMT   |   Update On 2022-12-06 09:49 GMT
  • வீடுகளுக்கு குடிநீா் வினியோகம் செய்ய வேண்டும்.
  • பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.

ஊட்டி

கூடலூா் நகரசபையை கண்டித்து பா.ஜ.க. சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு நகரத் தலைவா் ரவிகுமாா் தலைமை தாங்கினார்.

மாநில விவசாய அணி செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான சவுந்திரபாண்டியன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசினார்.

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள் கூறிய தாவது:-

மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியை தூய்மைப் பணியாளா்களின் வங்கிக் கணக்கில் ஊதியமாக செலுத்த வேண்டும். அனைத்து வாா்டுகளிலும் குடிநீா், நடைபாதை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்.

மேலும், மத்திய அரசின் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் குழாய்களை அமைத்து ஒருநாள் விட்டு ஒருநாள் வீடுகளுக்கு குடிநீா் வினியோகம் செய்ய வேண்டும்.

வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட மங்குழி ஆற்றின் பாலத்தை உடனடியாக கட்ட வேண்டும். கூடலூா் பஸ் நிலையம் கட்டும் பணி தொய்வடைந்துள்ளது. விரைந்து கட்டி முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஆர்ப்பாட்டத்தில் பட்டியல் அணி மாவட்டச் செயலாளா் பாா்த்திபன், பொதுச் செயலாளா் நளினி, நிா்வாகிகள் ராதாகிரு ஷ்ணன், சிபி, ராமு, வக்கீல் அணி நிா்வாகி பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

Similar News