உள்ளூர் செய்திகள்

சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published On 2023-05-30 09:47 GMT   |   Update On 2023-05-30 09:47 GMT
  • காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.
  • சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்கிட வேண்டும்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் நேற்று மாலை பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்டத் தலைவர் மணி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர்கள் ராதா, காந்திமதி ஆகியோர் முன்னிலை வகித்தனார். மாவட்ட இணைச் செயலாளர் சாந்தி கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன் தொடக்க உரையாற்றினார்.

அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், மாவட்டத் தலைவர்கள் ஜெய்சங்கர், சரவணன், மாநில துணைத் தலைவர் வெங்கடேசன், மாநில பொருளாளர் நந்தகுமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் நடராஜன் சிறப்புரை ஆற்றினர்.

மாநில துணைத் தலைவர் மஞ்சுளா நிறைவுரை ஆற்றினார். மாவட்ட பொருளாளர் கனகவள்ளி நன்றி கூறினார்.

இந்த பெருந்திரள் முறையீடு ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல் அமைச்சரின் தேர்தல்கால வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். காலைச் சிற்றுண்டி உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர்களிடமே வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினார்கள். இதில், 200 க்கும் மேற்பட்ட சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News