உள்ளூர் செய்திகள் (District)
- பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்.
- முடிவில் மாவட்ட பொருளாளர் ஹாஜா மைதீன் நன்றி கூறினார்.
திருத்துறைப்பூண்டி:
பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலை கண்டித்து திருவாரூர் தெற்கு மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் முத்துப்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் யாசர் அரபாத் தலைமை தாங்கினார்.
மாநில செயலாளர் காஞ்சி சித்திக், மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான், மாவட்ட துணை தலைவர் அசாருதீன், மாவட்ட துணை செயலாளர் முகம்மது தவ்பீக் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் மாநில செயலாளர் அன்சாரி, மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான், மாவட்ட துணை செயலாளர்கள் முகம்மது வாசிம், ஹாஜா மைதீன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முடிவில் மாவட்ட பொருளாளர் ஹாஜா மைதீன் நன்றி கூறினார்.