உள்ளூர் செய்திகள்
- அருப்புகோட்டை சண்முகவேல் குடும்பத்தில் ஒருவருக்கு பணி வழங்க வேண்டும்.
- நிவாரணமாக ரூ.1 கோடி வழங்க வேண்டும்.
தஞ்சாவூர்:
தஞ்சையில் தமிழ்நாடு வேளாண்மை துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் சிவலிங்கம் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் பணிச்சுமையால் மரணம் அடைந்த மதுரை உதவி செயற்பொறியாளர் (வேளாண்மை பொறியியல்) அலுவலக உதவியாளர் அருப்புகோட்டை சண்முகவேல் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க வேண்டும். நிவாரணமாக ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
இதில் வடக்கு வட்ட செயலாளர் ஜெய்ராஜ், மாநில செயலாளர் கோதண்டபாணி, முன்னாள் மாநில தலைவர்பன்னீர்செல்வம், முன்னாள் மாநில தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.