உள்ளூர் செய்திகள் (District)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கூட்டம் நடந்தது.

ரத்தவங்கி கட்டிடத்தை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2023-10-05 09:41 GMT   |   Update On 2023-10-05 09:41 GMT
  • பூரண மதுவிலக்கை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்.
  • ரத்தவங்கி கட்டிடத்தை திறந்து செயல்படுத்த கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் தெற்கு மாவட்ட அக்டோபர் மாத நிர்வாகக் குழு கூட்டம் மாவட்ட தலைவர்யாசர் அரபாத் தலைமையில் முத்துப்பேட்டையில் நடைப்பெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான், மாவட்ட பொருளாளர் ஹாஜா முகைதீன், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஹாஜா மைதீன், அப்துர் ரசீது, முகமது வாசிம்,முகமது தவ்பீக், மாவட்ட மாணவரணி ராஜா முகமது, மருத்துவரணி அப்துர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில், முஸ்லிம் சிறைவாசிகளை தமிழ்நாடு அரசு காலதாமதம் செய்யாமல் விடுதலை செய்ய வேண்டும்.

பூரண மதுவிலக்கை தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும்.

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அதிகரிக்க வேண்டும், கல்வி, வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு பற்றிய வெள்ளை அறிக்கையை தமிழ்நாடு அரசு வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மேலும் திருத்துறைப்பூண்டியில் கட்டப்பட்ட ரத்தவங்கி கட்டிடத்தை திறந்து செயல்படுத்த வலியுறுத்தி வரும் 18-ம் தேதி திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனை முன்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

முடிவில் மாவட்ட செயலாளர் அப்துர் ரஹ்மான் நன்றி கூறினார்.

Tags:    

Similar News