உள்ளூர் செய்திகள்

மாநிலங்களுக்கு நிதி மறுப்பு: மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published On 2024-09-09 05:40 GMT   |   Update On 2024-09-09 05:40 GMT
  • தேசிய கல்வி கொள்கையை கட்டாயமாக திணிக்க முயற்சி செய்கிறது.
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை:

தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்த மறுப்பதால் தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு நிதி வழங்க மறுத்து வருகிறது.

மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக திகழும் தமிழ்நாட்டுக்கு அனைவருக்கும் கல்வி திட்டத்தின்கீழ் நிதி ஒதுக்காமல் மத்திய அரசு தாமதப்படுத்தி வருகிறது. அது மட்டுமின்றி தேசிய கல்வி கொள்கையை கட்டாயமாக திணிக்கவும் முயற்சி மேற்கொண்டு வருகிறது.

இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கல்வி மற்றும் சமத்துவத்தை ஒன்றிய அரசு ஊக்குவிக்கும் லட்சணம் இதுதானா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.

கல்வி, சமூக திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்க மறுப்பது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு உள்ள சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது:-

சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுக்கான நிதியை மறுப்பது, அதேவேளையில் குறிக்கோள்களில் வெற்றி அடையாதோருக்குத் தாராளமாக நிதி ஒதுக்குவது இப்படித்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு தரமான கல்வியையும் சமத்துவத்தையும் ஊக்குவிக்கத் திட்டமிட்டுள்ளதா?

முடிவை நாட்டுக்கும், நாட்டு மக்களின் புரிதலுக்குமே விட்டுவிடுகிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News