உள்ளூர் செய்திகள்

தருமபுரி மாவட்டத்தில்அரசு உண்டு உறைவிடப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி

Published On 2023-05-08 09:27 GMT   |   Update On 2023-05-08 09:27 GMT
  • பிளஸ்-2 மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
  • தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

தருமபுரி,

தருமபுரி மாவட்டத்தில் இன்று பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் மாவட்டத்தில் 92.72 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.

இதில் தருமபுரி மாவட்டம் அரூரை அடுத்த சித்தாரிபேட்டையில் உள்ள மலைவாழ்மக்கள் அரசு உண்டு உறைவிடப்பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

இதில் பயின்ற பிளஸ்-2 மாணவர்கள் அனைவரும் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் பாராட்டினர்.

இதேபோன்று தருமபுரியில் தனியார் பள்ளியில் செயல்பட்டு மார்டன் பள்ளியில் பயின்ற பிளஸ்-2 மாணவ, மாணவி்கள் 100 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Tags:    

Similar News