உள்ளூர் செய்திகள் (District)

விழிப்புணர்வு முகாம் நடந்தது.

வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் தீவிர விழிப்புணர்வு முகாம்

Published On 2022-07-19 10:01 GMT   |   Update On 2022-07-19 10:01 GMT
  • பொது மக்களுக்கு வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஓ.ஆர்.எஸ் பவுடர் பாக்கெட்டுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.
  • முன்னதாக ஓ.ஆர்.எஸ் பவுடர் பாக்கெட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துப்பட்டது.

கபிஸ்தலம்:

தஞ்சை மாவட்டம், கபிஸ்தலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைகளுக்கான ஒருங்கிணைந்த வயிற்றுப் போக்கை கட்டுப்படுத்தும் தீவிர விழிப்புணர்வு முகாம் வட்டார மருத்துவ அலுவலர் தீபக் தலைமையில் நடைபெற்றது. மருத்துவ அலுவலர்கள் ராஜ்குமார், சிவரஞ்சனி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அனைவரையும் வட்டார சுகாதார மேற்பரப்பு பாஸ்கரன் வரவேற்று பேசினார்.

சிறப்பு விருந்தினராக கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் ஓ.ஆர்.எஸ் பவுடர் பாக்கெட்டுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். முன்னதாக ஓ.ஆர்.எஸ் பவுடர் பாக்கெட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதி சுகாதார செவிலியர் முத்து மாலை, கிராம சுகாதார செவிலியர்கள் ஜான்சி ராணி, சங்கவை, செந்தமிழ் செல்வி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள், பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News