உள்ளூர் செய்திகள்

கிருஷ்ணகிரியில் தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

Published On 2023-05-11 09:12 GMT   |   Update On 2023-05-11 09:12 GMT
  • மாநிலமே வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளதால், மக்களும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர்.
  • மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தான் மக்களுக்கு பொற்கால ஆட்சி என்பதை மக்கள் உணர தொடங்கிவிட்டனர்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரியில் நகர தி.மு.க. சார்பில், திமுக அரசின் இரண்டாண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு தி.மு.க. நகர செயலாளர் நவாப் தலைமை தாங்கினார். நகராட்சி தலைவரும், தலைமை செயற்குழு உறுப்பினருமான பரிதாநவாப் வரவேற்றார்.

மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளர் நாராயணமூர்த்தி, நகர அவைத்தலைவர் மாதவன், நகர துணை செயலாளர் பொன்.குணசேகரன், அரங்கண்ணல், மீனா நடராஜன், ஜான்டேவிட்ராஜ், சுகுமார், திருமலைச்செல்வன், அமீர்சுஹேல் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின் மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்சியில் அனைத்து குடும்பத்தினரும் ஏதோ ஒரு வகையில் பயனடைந்து வருகின்றனர். மாநிலமே வளர்ச்சி பாதையில் சென்று கொண்டுள்ளதால், மக்களும் மகிழ்ச்சியுடன் இருக்கின்றனர். மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தான் மக்களுக்கு பொற்கால ஆட்சி என்பதை மக்கள் உணர தொடங்கிவிட்டனர்.

குறிப்பாக தாய்மார்களுக்கு எண்ணற்ற பல திட்டங்களை செயல்படுத்து வரும் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அனைவரும் என்னென்றும் உறுதுணையாக இருந்திட வேண்டும் என தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட துணை செயலாளர் கோவிந்தசாமி, மாவட்ட பொருளாளர் கதிரவன், தலைமை செயற்குழு உறுப்பினர் தம்பிதுரை, பொதுக்குழு உறுப்பினர்கள் அஸ்லம், சித்ரா சந்திரசேகர் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், வட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News