உள்ளூர் செய்திகள்

தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் டாக்டர்கள் ஸ்டிரைக்

Published On 2024-08-17 04:45 GMT   |   Update On 2024-08-17 04:45 GMT
  • அரசு டாக்டர்கள் ஸ்டிரைக்கால் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பாதிக்கப்பட்டனர்.
  • சிலர் குழந்தைகளுடன் வந்திருந்து சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் சென்றனர்.

தேனி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி, க.விலக்கு, ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி உள்ளிட்ட இடங்களில் அரசு ஆஸ்பத்திரி மற்றும் சுமார் 70க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அரசு டாக்டர்கள் ஸ்டிரைக்கால் புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற வந்த நோயாளிகள் பாதிக்கப்பட்டனர். அந்த பிரிவில் பெயர் பதிவுகூட நடைபெறவில்லை. ஆனால் அவசர சிகிச்சை மற்றும் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தொடர் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.


இதேபோல் திண்டுக்கல்லில் அரசு மருத்துவக்கல்லூரி, பழனி, ஒட்டன்சத்திரம், நத்தம், வேடசந்தூர் உள்ளிட்ட அரசு ஆஸ்பத்திரி மற்றும் 100க்கும் மேற்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை. மற்ற சிகிச்சைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மட்டும் தினந்தோறும் சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புறநோயாளிகள் வந்து செல்லும் நிலையில் டாக்டர்கள் ஸ்டிரைக் குறித்து எந்த விவரமும் தெரியாததால் அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் குழந்தைகளுடன் வந்திருந்து சிகிச்சை பெற முடியாமல் திரும்பிச் சென்றனர்.

Tags:    

Similar News