உள்ளூர் செய்திகள்

கொடநாட்டில் போலீஸ் சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வு

Published On 2023-05-25 09:03 GMT   |   Update On 2023-05-25 09:03 GMT
  • போதைப்பொருள் சம்பந்தமான தகவல்கள் இருந்தால் புகார் தெரிவிக்க வேண்டும்.
  • ெகாடநாடு ஊராட்சி துணைத்தலைவர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரவேனு,

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், ெகாடநாடு ஊராட்சிக்கு உட்பட்ட கெரடாமட்டம் பகுதியில் 500-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு ஏராளமான பொதுமக்களும் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சோலூர்மட்டம் போலீசார் சார்பில் பொதுமக்கள் மத்தியில் போதைப்பொருட்கள் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. இதில் ெகாடநாடு ஊராட்சி துணைத்தலைவர் ரவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து சோலூர்மட்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலுச்சாமி கூறுகையில் போதைப்பொருளுக்கு ஏராளமான இளைஞர்கள் பலியாகி உள்ளனர். அதனை தடுக்கும் நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபட்டாலும் பொதுமக்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும். எனவே பொதுமக்கள் தங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். அவர்கள் எங்கு செல்கிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை உற்று நோக்க வேண்டும்.

உங்கள் பகுதியில் போதைப்பொருள் சம்பந்தமான தகவல்கள் இருந்தால் எங்களிடம் தெரிவிக்க வேண்டும். போதைப் பொருள் இல்லாத ஒரு சமுதாயத்தை உருவாக்க காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அப்போது போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு கோடநாடு ஊராட்சி சார்பாக பல்வேறு உதவிகள் செய்யப்படுவதாகவும் துணைத் தலைவர் ரவி தெரிவித்தார்.

Tags:    

Similar News