உள்ளூர் செய்திகள்

ஊட்டியில் போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

Published On 2023-03-31 09:12 GMT   |   Update On 2023-03-31 09:12 GMT
  • பேரணியை மாவட்ட நீதிபதி மற்றும் பலர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
  • இப்ேபரணி ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட சமூக தன்னார்வலர்கள் கூட்டமைப்பின் சார்பில் ஊட்டி அரசினர் கலைக்கல்லூரியில் மாணவர்களுக்கு போதைப்பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பேரணி நடைபெற்றது.

பேரணியை மாவட்ட நீதிபதியும் நிரந்தர மக்கள் நீதிமன்றத்தின் தலைவருமான நீதிபதி ஆர்.ஸ்ரீதரன், காவல்துறையின் துணை கண்காணிப்பாளர் யசோதா, நகர மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிக்குமார் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இதில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வனக்குமார், கனகராஜ், அரசினர் கலைக்கல்லூரி முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊட்டி அரசினர் கலைக்கல்லூரியில் துவங்கிய இந்த பேரணி ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

Tags:    

Similar News