கோவையில் குடிபோதையில் கோஷ்டி மோதல்-3 பேர் கைது
- குடிபோதையில் ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர்.
- குமார் போத்தனூர் போலீசில் புகார் செய்தார்.
குனியமுத்தூர்,
கோவை போத்தனூர் அருகே உள்ள அண்ணாபுரத்தை சேர்ந்தவர் குமார் (வயது 34). இவர் தனியார் இன்சூரன்சு நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று இவர் தனது நண்பர்களான பாலாஜி, நிசாந்த், செல்வராஜ் ஆகியோருடன் அந்த பகுதியில் உள்ள ரெஸ்டாரண்டுக்கு சென்றார்.
அங்கு வைத்து 4 பேரும் மது குடித்தனர். பின்னர் குமார் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டு சென்றார். மோட்டார் சைக்கிள் மெட்டூர் கார்மல் நகர் அருகே சென்ற போது அங்கு நின்று கொண்டு இருந்த 3 பேர் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் குமாரை மிரட்டி தகராறு செய்தனர். இது குறித்து அவர் தனது நண்பர்கள் 3 பேருக்கு தகவல் தெரிவித்தார். உடனடியாக அவர்கள் ஒரு காரில் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது குடிபோதையில் ஒருவரை ஒருவர் மாறி, மாறி தாக்கி கொண்டனர். தாக்குதலில் செல்வராஜ் என்பவருக்கு கையில் கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. இதனை பார்த்த அவரது நண்பர்கள் உடனடியாக அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுகுறித்து குமார் போத்தனூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் குடிபோதையில் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட போத்தனூர் அன்பு நகரை சேர்ந்த அந்ேதாணி ராஜசேகர், தூத்துக்குடியை சேர்ந்த விஜய் (26), புதுக்கோட்டையை சேர்ந்த அந்ேதாணி ஜோசப் (23) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.