உள்ளூர் செய்திகள்

காட்டுமன்னார்கோவிலில் இ- சேவை மையம் முடக்கம்

Published On 2022-07-01 05:59 GMT   |   Update On 2022-07-01 06:26 GMT
  • இடைத்தரகர்கள் பணம் பெற்றுக்கொண்டு டோக்கன் எடுத்து தருவதாக கூறி பொதுமக்களிடம் வசூல் செய்வதாக தகவல்
  • அதிகாலையில் இருந்தே ஆண்கள், பெண்கள், பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் என பலரும் காத்திருக்கின்றனர்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆதார் இ சேவை மையம் இயங்கி வருகிறது. இந்த சேவை மையத்தில் பணிகள் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் வருமான சான்றிதழ்' மற்றும் இருப்பிட சான்றிதழ் விரைவாக வாங்க முடியாத நிலை உள்ளது. அதிகாலையில் இருந்தே ஆண்கள் பெண்கள் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் என பலரும் காத்திருக்கின்றனர்.

இந்த இ சேவை மையத்தில் தற்பொழுது டோக்கன் என்ற முறையில் இடைத்தரகர்களும் பணம் பெற்றுக்கொண்டு டோக்கன் எடுத்து தருவதாக கூறி பொதுமக்களிடம் வசூல் செய்து வருவதாக தெரிகிறது.

பொதுமக்களின் நலன் கருதி மிக விரைவாக இந்த ஆதார் சேவை மையத்தை செயல்படுத்த வேண்டுமென்று காட்டுமன்னார்கோவில் பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News