உள்ளூர் செய்திகள் (District)
சந்தானராமர் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு
- புரட்டாசி திருவோணத்தை யொட்டி சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
- திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
நீடாமங்கலம்:
நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் ஏகாதசி சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
இதனையொட்டி வேதாந்த மகாதேசிகர் திருநட்சத்திரம், புரட்டாசி திருவோணம் நட்சத்திரத்தில் ஆழ்வார் சன்னதியில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.
அதனைத்தொடர்ந்து சீதா, லட்சுமன, அனுமன் சமேத சந்தானராமருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.