உள்ளூர் செய்திகள்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் சாவு
- அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று முனுசாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
- பலத்த காயமடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே சிக்கபூவதி பகுதியைச் சேர்ந்த முனுசாமி (வயது80). இவர் நேற்று காமன்தொட்டி அருகே உள்ள ஒரு ஓட்டல் அருகே நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று முனுசாமி மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் பலத்த காயமடைந்த முனுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது மகன் முத்து சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனம் எது? அந்த வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.