உள்ளூர் செய்திகள் (District)
மயங்கி விழுந்த முதியவர் சிகிச்சை பலனின்றி சாவு
- சேலம் திருவாக் கவுண்டனூர் பைபாஸ் ரவுண்டானா அருகில் கடந்த 2-ம் தேதி முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார்.
- இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
சேலம்:
சேலம் திருவாக் கவுண்டனூர் பைபாஸ் ரவுண்டானா அருகில் கடந்த 2-ம் தேதி முதியவர் ஒருவர் மயங்கி கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து போடிநாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன், சம்பவ இடத்திற்கு வந்து முதியவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
போலீசாரின் விசாரணை யில், மயங்கி கிடந்த முதியவர் தூத்துக்குடி மாவட்டம் அழகேசபுரம் பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (வயது 75) என்பது தெரியவந்தது. இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சீனிவாசன், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.