உள்ளூர் செய்திகள்

இருமத்தூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா

Published On 2023-01-13 10:02 GMT   |   Update On 2023-01-13 10:02 GMT
  • இருமத்தூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
  • ஊராட்சி பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டன.

கிருஷ்ணாபுரம்,

தருமபுரி மாவட்டம், மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், இருமத்தூர் ஊராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மாதன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர் ராஜலிங்கம், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பழனியம்மாள் சரவணன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பத்மினி துரைசாமி, கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஊராட்சி செயலாளர் சிவக்குமார் வரவேற்று பேசினார். இவ்விழாவில் மொரப்பூர் ஒன்றிய குழு தலைவர் சுமதி செங்கண்ணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொங்கல் வைத்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினார். இதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள், குடிநீர் மேல் தேக்க தொட்டி இயக்குனர்கள் உள்ளிட்ட ஊராட்சி பணியாளர்களுக்கு புத்தாடைகள் மற்றும் பொங்கல் பரிசு வழங்கப்பட்டன.

இவ்விழாவில் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் கஸ்தூரி நாகராஜ், மணி, ராஜப்பன், தனலட்சுமி முருகன், சரோஜா அழகப்பன், ஆனந்தன், தேவி கார்த்திகேயன், சரவணன் உள்ளிட்ட பலர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News