இறந்த இன்ஸ்பெக்டர் உடலுக்கு 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை
- இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.
- மின் மயானத்தில் 21 குண்டுகள் முழங்க போலீசார் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
பு.புளியம்பட்டி:
கோவை மாவட்டம் சிறுமுகை பழத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் கண்ணா (வயது 50). இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர்.
ரமேஷ் கண்ணா திருவாரூர் மாவட்டம் பரவக்கோட்டை போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தார்.
இந்நிலையில் இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியி ல்லாமல் சிறுமுகை பழத்தோட்டத்தில் உள்ள தனது சொந்த வீடு மற்றும் பகுத்தம்பாளையத்தில் உள்ள தனது தாய் வீட்டில் இருந்து வந்தார்.
அதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை 5 மணியளவில் ரமேஷ் கண்ணா நெஞ்சுவலி ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார்.
இதனையடுத்து மறைந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் கண்ணா உடலுக்கு இறுதி மரியாதை காவல் துறையின் சார்பில் சத்திய மங்கலம் மின் மயானத்தில் 21 குண்டுகள் முழங்க போலீசார் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதில் போலீஸ் துணை சூப்பிரண்டு ஐமன் ஜமால் உள்பட போலீசார் இறுதி மரியாதை செலுத்தினர்.