உள்ளூர் செய்திகள்

தோட்டத்தில் புகுந்து வாழைகளை சேதப்படுத்திய ஒற்றை யானை

Published On 2022-07-15 07:55 GMT   |   Update On 2022-07-15 07:55 GMT
  • வனப்பகுதியில் இருந்து வந்த கருப்பன் என்ற ஒற்றை காட்டு யானை தோட்டத்துக்குள் புகுந்தது. தொடர்ந்து அந்த யானை அங்கு சாகுபடி செய்யப்பட்ட வாழையை திண்று மிதித்து சேதப்படுத்தியது.
  • வனத்துறையினர் விரைவில் கும்கி யானை உதவியுடன் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தாளவாடி:

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட வனப்பகுதிகளில் ஏரா ளமான வன விலங்கு கள் உள்ளன.

இந்த வனப்பகுதி களில் இருந்து உணவு, தண்ணீர் தேடி யானைகள் அடிக்கடி வெளியேறி அருகே உள்ள விவசாய தோட்டத்தில் புகுந்து பயிர்களை நாசம் செய்வது தொடர்கதையாகிவருகிறது .

இந்நிலையில் தாளவாடி வனச்சரகத்துக்கு உட்பட்ட மல்குத்திபுரம் கிராமத்தை சேர்ந்தவர் திருமூர்த்தி (60). இவர் தனது 3 ஏக்கர் தோட்டத்தில் வாழை சாகுபடி செய்துள்ளார்.

இந்த நிலையில் இரவு 12 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வந்த கருப்பன் என்ற ஒற்றை காட்டு யானை தோட்டத்துக்குள் புகுந்தது. தொடர்ந்து அந்த யானை அங்கு சாகுபடி செய்யப்பட்ட வாழையை திண்று மிதித்து சேதப்படுத்தியது.

இந்த சத்தம் கேட்டு அங்கு வந்த விவசாயி திருமூர்த்தி ஒற்றை காட்டு யானை பயிர்களை சேதாரம் செய்வது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி வனத்துறைக்கும் மற்றும் விவசாயிகளுக்கும் தகவல் அளித்தார்.

பின்னர் விவசாயிகள் ஒன்று சேர்ந்து யானையை விரட்டினர். ஆனால் யானைகள் வாழைகளை சேதப்படுத்தி கொண்டு இருந்தது. சுமார் 1 மணி நேரத்திக்கு பிறகு யானை வனப்பகுதிக்கு சென்றது.

இதில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 300 வாழைகள் சேதம் ஆனது. கருப்பன் என்ற ஆட்கொல்லி யானையை விரட்ட 2 கும்கி யானைகள் வனப்பகுதியில் உள்ளது.

இந்த நிலையில் கும்கி யானை உள்ள பகுதியிலயே கருப்பன் யானை வனப்பகுதியை விட்டு வெளியேறி விவசாய தோட்டத்தில் புகுந்து நாசம் செய்தது விவசாயிகளிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

எனவே வனத்துறையினர் விரைவில் கும்கி யானை உதவியுடன் கருப்பன் யானையை பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags:    

Similar News