உள்ளூர் செய்திகள்

மது விற்ற வாலிபர் கைது

Published On 2022-12-21 09:51 GMT   |   Update On 2022-12-21 09:51 GMT
  • ரகுநாத், செல்லமுத்து அனுமதியின்றி டாஸ்மாக் மது விற்பனை செய்வதும் தெரிய வந்தது.
  • கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரகுநாத்தை கைது செய்தனர்.

கோபி:

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள சிங்கிரிபாளை யம் பகுதியில் அனுமதியின்றி டாஸ்மாக் மது விற்பனை செய்யப்படுவதாக போலீ சாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் கடத்தூர் போலீசார் சிங்கிரிபாளை யம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மது கடை அருகே சோதனை செய்து ஆய்வு செய்தனர். அப்போது அந்த பகுதியில் 2 பேர் அனுமதி யின்றி மது விற்று கொண்டு இருந்தனர்.

இதையடுத்து போலீசார் மது விற்று கொண்டு இருந்த ஒருவரை பிடித்து விசாரித்த னர்.

இதில் அவர்கள் கோபி செட்டிபாளையத்தை அடுத்த காசிபாளையம் பகுதியை சேர்ந்த ரகுநாத் (32), புதுகோட்டை மாவட்ட த்தை சேர்ந்த செல்லமுத்து என்றும் அனுமதியின்றி டாஸ்மாக் மது விற்பனை செய்வதும் தெரிய வந்தது.

இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து ரகுநாத்தை கைது செய்தனர். இதை தொடர்ந்து அவரிடம் இருந்து ரூ.2,340 மதிப்புள்ள 18 மது பாட்டில்கள் மது விற்று வைத்து இருந்த ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசாரை கண்டதும் செல்லமுத்து அங்கு இருந்து தப்பி ஓடி விட்டார். அவரை போலீசார் தேடி வரு கிறார்கள்.

Tags:    

Similar News