உள்ளூர் செய்திகள்

சென்னிமலை முருகன் கோவிலில் கோடை வெயில் தாக்கத்தால் தார் ரோடு பகுதியில் அடர் வெள்ளை வர்ணம் அடிக்கப்பட்டுள்ளது.

பக்தர்களுக்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க அடர் வெள்ளை வர்ணம்

Published On 2023-04-01 09:30 GMT   |   Update On 2023-04-01 09:30 GMT
  • நடைபாதை கற்கள் சூடாகி பக்தர்களின் பாதங்களை பதம் பார்த்தது.
  • தார் ரோடு பகுதியில் அடர் வெள்ளை வர்ணம் அடித்துள்ளனர்.

சென்னிமலை:

சென்னிமலை முருகன் கோவிலில் தினமும் 6 கால பூஜைகள் நடக்கிறது. மேலும் தொடர்ந்து பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா வருகிறது.

இந்நிலையில் உள்ளூர், வெளியூர் பக்தர்கள் பள்ளி விடுமுறை தினத்தால் குழந்தைகளுடன் வந்து பூஜைகளில் பங்கேற்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள் வாகனங்களை நிறுத்தி விட்டு வெகு தூரம் நடக்க வேண்டும்.

இந்த இடத்தில் தார் ரோடு வெட்ட வெளியாக உள்ளதால் தற்போது வெயில் தாக்கத்தில் சூடாகி நடக்க மிகவும் சிரமப்பட்ட னர். மேலும் கோவில் பரிகாரத்திலும் நடைபாதை கற்கள் சூடாகி பக்தர்களின் பாதங்களை பதம் பார்த்தது.

குறிப்பாக முதியவர்கள், குழந்தைகள் மிகவும் சிரமப்பட்டனர். இதையறிந்த கோவில் நிர்வாகம் வெயில் தாக்கத்தை கட்டுப்படுத்த கோவில் உள் பிரகாரம் பகுதியில் காயர் மேட் போட்டுள்ளனர்.

கோவில் வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் இருந்து செல்ல தார் ரோடு பகுதியில் அடர் வெள்ளை வர்ணம் அடித்துள்ளனர்.

இது வெயிலுக்கு இதமாக இருப்பதாகவும், அதிக சூடு கால் பாதங்களில் தாக்குவது இல்லை எனவும் பக்தர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Tags:    

Similar News