உள்ளூர் செய்திகள்

ரெயிலில் பாய்ந்து முதியவர் தற்கொலை

Published On 2023-01-06 10:49 GMT   |   Update On 2023-01-06 10:49 GMT
  • 55 வயது மதிக்க த்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது
  • அந்த நபர் ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது

ஈரோடு,

ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட புகளூர்- கொடு முடி ரெயில் நிலையங்களு க்கிடையே நொய்யல் ரெயிவே பாலத்தில் சம்பவ த்தன்று 55 வயது மதிக்க த்தக்க முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து ரெயில்வே போலீசார் சம்பவ இடத்து க்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார் அந்த முதியவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.

அந்த முதியவரிடம் இருந்த பேப்பரில் மனைவி பெயர் சித்ரா, மகன்கள் பூபதி, பாலமுருகன் மகள்கள் மோனிகா, யாஷிகா என பெயர் எழுதி இருந்தது. அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை.

போலீசாரின் முதற் கட்ட விசாரணையில் அந்த நபர் ஓடும் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News