உள்ளூர் செய்திகள்
- ஈங்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி நாளை நடக்கிறது.
- காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
ஈரோடு:
ஈங்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப்பணி நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.
இதனால் பெருந்துறை கோட்டத்தை சார்ந்த பெருந்துறை தெற்கு பகுதி, கொங்கு கல்லூரி, நந்தா கல்லூரி, மூலக்கரை, வெள்ளோடு, கவுண்டச்சிபாளையம், ஈங்கூர்,
பாலப்பாளையம், மு.பிடாரியூர், வடக்குப்பகுதி, வேலாயுதம்பாளையம், 1010 நெசவாளர்காலனி, பெருந்துறை ஆர்.எஸ்., பெருந்துறை ஹவுசிங்யுனிட் ஆகிய
அனைத்து பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் (பெருந்துறை) தெரிவித்துள்ளார்.