உள்ளூர் செய்திகள் (District)
போக்சோ சட்டத்தின் கீழ் வாலிபர் கைது
- சிறுமியை செல்வகணேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
- பெருந்துறை போலீசார் செல்வகணேசை கைது செய்தனர்.
பெருந்துறை:
சென்னிமலை அருகே உள்ள பிடாரியூரை சேர்ந்தவர் செல்வகணேஷ் (வயது 22). இவருக்கும் பெருந்துறை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமிக்கு இடையே இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து ஆசை வார்த்தை கூறி அந்த சிறுமியை செல்வகணேஷ் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் பெருந்துறை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து செல்வகணேசை கைது செய்தனர்.