எட்டிமடைபுதூர் தேவி கருமாரியம்மன் கோவில் கம்பம் விடும் நிகழ்ச்சி
- நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடை புதூர் பகுதியில் பிரசித்தி பெற்ற தேவி கருமாரியம்மன் கோவில் கம்பம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- 28-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது.
திருச்செங்கோடு:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு எட்டிமடை புதூர் பகுதியில் பிரசித்தி பெற்ற தேவி கருமாரியம்மன் கோவில் கம்பம் விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடனை செலுத்தினர். இந்த கோவிலின் திருவிழா கடந்த 28-ந் தேதி பூச்சாட்டுகளுடன் தொடங்கியது.அபிஷேக ஆராதனை, வழிபாடுகள், சக்தி அழைத்தல், கும்பம் தாளித்தல், பூச்சொரிதல் வழிபாடு, திருவிளக்கு பூஜை, பொங்கல் வைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
தேவி கருமாரியம்மன் கோயிலில் இருந்து கம்பம் பிடுங்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக திருச்செங்கோடு தெப்பக்குளத்தை அடைந்தது. பூசாரியும், பக்தர்களும் தெப்பக்குளத்தில் கம்பத்தை பூஜை செய்து வழிபட்டு குளத்தில் விட்டனர். ஏராளமான பக்தர்கள் வேண்டுதலுக்காக வேடமிட்டு ஆடி படி ஊர்வலமாக வந்தனர்.