உள்ளூர் செய்திகள்

களக்காடு அருகே தொழிலாளியை மிரட்டி பணம் பறிப்பு

Published On 2022-10-25 08:15 GMT   |   Update On 2022-10-25 08:15 GMT
  • நாகராஜ் ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.
  • சோமசுந்தரம் நாகராஜிடம் அரிவாளை காட்டி மிரட்டி, ரூ. 300 ஐ எடுத்துக் கொண்டார்.

களக்காடு:

களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர், மெயின்ரோட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 57). கூலி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் ஜெ.ஜெ.நகர் விலக்கு அருகே தனது நண்பருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த வடக்கு கள்ளிகுளத்தை சேர்ந்த அப்பாவு மகன் மாடசாமி என்ற சோமசுந்தரம் (37) நாகராஜிடம் செலவுக்கு ரூ. 500 கேட்டுள்ளார். அதற்கு நாகராஜ் பணம் கொடுக்க மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த சோமசுந்தரம் அரிவாளை காட்டி மிரட்டி, அவரது சட்டை பையில் வைத்திருந்த ரூ. 300 ஐ எடுத்துக் கொண்டார். மேலும் இதுபற்றி போலீசில் புகார் செய்தால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார்.

இதுபற்றி நாகராஜ் களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ரெங்கசாமி இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி, சோமசுந்தரத்தை தேடி வருகிறார்.

Tags:    

Similar News