உள்ளூர் செய்திகள் (District)

கோவையில் பெண் என்ஜினீயர் புகைப்படத்துடன் போலி இன்ஸ்டாகிராம் பக்கம்

Published On 2023-04-25 08:59 GMT   |   Update On 2023-04-25 08:59 GMT
  • பெண் என்ஜினீயர் பேசுவது போல அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மெசேஜ் அனுப்பி வந்தார்.
  • என்ஜினீயர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

கோவை,

கோவை ஆர்.எஸ்.புரம் சி.எம்.சி. காலனியை சேர்ந்தவர் 22 வயது இளம் பெண். இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார்.

இந்தநிலையில் யாரோ மர்மநபர் ஒருவர் பெண் என்ஜினீயரின் புகைப்படத்தை வைத்து போலியாக அவரது பெயரில் இன்ஸ்டாகிரம் பக்கத்தை தொடங்கினார். பின்னர் அந்த பக்கத்தின் மூலம் பெண் என்ஜினீயர் பேசுவது போல அவரது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு மெசேஜ் அனுப்பி வந்தார். இதனை பார்த்த இளம்பெண்ணின் நண்பர்கள் இது குறித்து அவருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெண் என்ஜினீயர் இது குறித்து உடனடியாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண் என்ஜினீயர் பெயரில் அவரது புகைப்படத்தை வைத்து போலியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கி மெசேஜ் அனுப்பி வந்த மர்மநபரை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News