உள்ளூர் செய்திகள்
- விற்பனை உரிமம் பெற்றுள்ள விவசாயிகளின் விலை பொருள்களான காய்கறிகள் கீரைகள் பழங்களின் தரத்தை பார்வையிட்டார்.
- உழவர் சந்தைக்கு காய்கறி வரத்தை அதிகரிக்கவும், சாகுபடி தீவிரபடுத்தவும் ஆலோசனைகள் வழங்கி னார்.
பாபநாசம்:
ேவளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறையினரால் பாபநாசத்தில் நடத்தப்படும் பாபநாசம் உழவர் சந்தையை தஞ்சை மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் கலைச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
விற்பனை உரிமம் பெற்றுள்ள விவசாயிகளின் விலை பொருள்களான காய்கறிகள் கீரைகள் பழங்களின் தரத்தை பார்வையிட்டார். தராசுகள் மற்றும் எடைகளை சரி பார்த்தார்.
உழவர் சந்தைக்கு காய்கறி வரத்தை அதிகரிக்கவும், சாகுபடி தீவிரபடுத்தவும் ஆலோசனைகள் வழங்கி னார். விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். ஆய்வின்போது பாபநாசம் தோட்டக்கலை உதவி இயக்குனர் பரிமேலழகன், தோட்டக்கலை அலுவலர் தேவதர்ஷினி, உதவி தோட்டக்கலை அலுவலர் கார்த்திகேயன், வேளாண் விற்பனைத்துறை உதவி வேளாண்மை அலுவலர் பாலமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்.