உள்ளூர் செய்திகள் (District)

அந்தியூர் குருநாதசாமி கோவில் விழாவுக்கு 7 லட்சம் பக்தர்கள் வருகை

Published On 2024-08-14 05:43 GMT   |   Update On 2024-08-14 05:43 GMT
  • பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
  • கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்த 130 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தன.

அந்தியூர்:

ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் குருநாதசாமி கோவில் தேர்த் திருவிழா மிகவும் பிரசித்தி பெற்ற விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அந்தியூர் குருநாதசாமி கோவில் தேர்த்திருவிழா கடந்த 7-ந் தேதி தொடங்கி 10-ம் தேதி வரை வெகுவிமர்சியாக மாட்டுச் சந்தை, குதிரைச் சந்தையுடன் நடைபெற்றது.

இதையடுத்து தேர்த்திருவிழா நடந்தது. இதை தொடர்ந்து குருசாதசாமி கோவிலில் தேர்நிலை நிறுத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். விழாவில் அமைக்கப்பட்டு உள்ள பொழுது போக்கு அம்சங்களை காணதினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கிறார்கள். இதனால் தினமும் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டு வருகிறது.

இந்த பண்டிகையில் ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுமார் 7 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர்.

இதை தொடர்ந்து குருநாதசாமி கோவில்விழா இன்று பால் பூஜையுடன் விழா நிறைவடைகிறது. இதையொட்டி இன்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள்.

இந்த பண்டிகைக்காக 9 இடங்களில் பக்தர்களின் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் நிறுத்த 130 ஏக்கர் பரப்பளவில் பார்க்கிங் வசதி செய்யப்பட்டிருந்தன. மாடுகளை ஏற்றி வருவதற்காக 45,000 டெம்போக்களும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து 1 லட்சம் கார்களில் பக்தர்கள், வியாபாரிகள் வந்திருந்தனர்.

மேலும் 12 ஆயிரம் மாடுகள், ஆயிரம் குதிரைகள் கால்நடை சந்தைக்கு கொண்டு வரப்பட்டன. குதிரைச் சந்தை பகுதிகளில் சூதாட்டம் உள்ளிட்ட 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.4 லட்சத்து 50 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த ஆண்டு தஞ்சாவூர் சாஷ்டராயூனிவர் சிட்டியில் இருந்து 5 பேர் கொண்ட டீம், ஏ, டெக்னாலஜி பயன்படுத்தி பழைய குற்றவாளிகளை பிடிக்கும் வகையில் பிக் பாக்கெட் உள்ளிட்ட வழக்குகளில் 8 பேர் கைது செய்து சறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த முறை 4 இடங்களில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளான ராட்டணம், சாகச கிணறு, குழந்தைகள் விளையாட்டு உள்ளிட்டவைகள் அமைக்கப்பட்டிருந்தன். இதனால் மக்கள் கூட்டம் கட்டுப்படுத்தப்பட்டது.

விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் பவானி டிஎஸ்பி அமிர்தவர்ஷினி, அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் உள்ளிட்ட போலீசார் 700-க்கும் மேற்பட்டோர் அண்ணா மடுவு ஜி.எச் கார்னர், பஸ் நிலையம் ரவுண்டானா, வெள்ளப்பிள்ளையார் கோயில், வனம், கெட்டி சமுத்திரம் ஏரி பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் துரிதமாக செய்யப்பட்டு போக்குவரத்தில் சிரமம் இன்றி தங்கு தடை இன்றி செல்ல வழிவகை செய்திருந்தனர்.

கடந்தாண்டு வெள்ளப்பிள்ளையார் கோவில் அருகே அரசு போக்குவரத்து கழகத்தின் மூலம் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப் பட்டு இருந்தது. இந்த ஆண்டு அந்தியூர் வாரச்சந்தை வளாகத்தில் பஸ் வசதி செய்யப்பட்டு இருந்ததால் பக்தர்கள் ரவுண்டான பகுதியில் இருந்து நடந்து செல்லும் நிலை ஏற்பட்டது. ஆனாலும் இந்த மாற்றத்தினால் போக்குவரத்து நெரிசல் சற்று சரி செய்யப்பட்டது.

Tags:    

Similar News