உள்ளூர் செய்திகள்
- மாலை 5 மணியளவில் பணி முடித்துவிட்டு ஊழியர்கள் செல்ல இருந்தனர்.
- போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த ஜே.பாப்பானூர் கிராமத்தில் தென்னை நார் மில் நடத்தி வருபவர் சரஸ்வதி. இவரது நார் மில்லில் 15-ற்கும் மேற்பட்டோர் பணி புரிந்து வரும் நிலையில் மாலை 5 மணியளவில் பணி முடித்துவிட்டு ஊழியர்கள் செல்ல இருந்தனர்.
அப்போது மின்கசிவு காரணமாக தீப்பொறி ஏற்பட்டு நார் தீ பிடித்து எரிய தொடங்கியது. அடுத்தடுத்து குவித்து வைத்துள்ள நார் குவியல்கள் தீ பிடித்து எரியத்துங்கியது. விபரமறிந்து வந்த போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். அதற்குள்ளாக நார்மில்லின் மோட்டார், பெல்ட், இயந்திரங்கள் உள்ளிட்ட சுமார் 20 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமானது.