உள்ளூர் செய்திகள்

விழிப்புணர்வு முகாம் நடந்தது.

நிதிசார் கல்வி விழிப்புணர்வு முகாம்

Published On 2022-09-21 08:29 GMT   |   Update On 2022-09-21 08:29 GMT
  • குறைந்த வட்டியில் கடன் பெற்று, சேமிப்புகளை செலுத்தி பயனடைவீர்கள் என ஆலோசனை வழங்கப்பட்டது.
  • தெரு நிகழ்ச்சி மற்றும் தெரு நாடகம் முதலிய கலைநிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்ட்டது.

திருவையாறு:

திருவையாறு அருகே வைத்தியநாதன்பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நிதி சார் கல்வி விழிப்புணர்வு முகாம் நடந்தது.

இம்முகாமில் தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை தலைமை வகித்தார்.

தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குநர் பழனீஸ்வரி மற்றும் துணைப் பொதுமேலாளர் வரதராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நபார்டு வங்கி மாவட்ட வளர்ச்சி மேலாளர் அனீஷ்குமார் சிறப்புரை ஆற்றினார்.

வைத்தியநாதன் பேட்டை, ஆச்சனூர், கடுவெளி மற்றும் பெரும்புலியூர் ஆகிய வருவாய்க் கிராமங்களுக்கு வைத்தியநாதன் பேட்டை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கம் வேளாண் சேவையாற்றி வருவதை பாராட்டியும் இக்கிரா மங்களை விவசாயப் பெருமக்கள் அனைவரும் இக்கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்து 'வேளாண்மைக்கு தேவை யான நிதி உதவிகளை குறைந்த வட்டியில்கடனாகப் பெற்றும், வேளாண் கருவி களைப் பெற்றும், சேமிப்புகளை இச்சங்க த்தில் செலுத்தியும் பயனடை யுமாறு ஆலோச னைகள் வழங்கப்பட்டது.

கூட்டுறவு சங்கத்தின் சேவைகளை தெரு நிகழ்ச்சி மற்றும் தெரு நாடகம் முதலிய கலைநிகழ்ச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு தெரிவிக்கப்ட்டது.

இம்முகாமில் திருவையாறு மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் பாரதிதாசன், வைத்தியநாதன் பேட்டை தொடக் வேளாண்மை கூட்டுறவு சங்கச் செயலாளர் தவமூர்த்தி, தலைவர் சங்க இயக்குநர்கள், சங்க உறுப்பினர்கள் ' மகளிர் சுய உதவிக் குழுவினர், ரேசன் கடை விற்பனையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின் பொதுமேலாளர் திராவிடச் செல்வன் வாழ்த்துரையும் நிகழ்ச்சிகளைத் தொகு த்தும் வழங்கினார்.

விழாநி றைவில் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கியின்முதன்மை வருவாய் அலுவலர் குமரவேல் நன்றி கூறினார். இம்முகாமிற்கான ஏற்பாடு களை வைத்திய நாதன் பேட்டை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நிர்வா கத்தினர் செய்திருந்தார்கள்.

Tags:    

Similar News