உள்ளூர் செய்திகள்
- தனியாருக்கு சொந்தமான மசாலா குடோன் செயல்பட்டு வருகிறது.
- இந்த குடோனில் நேற்று இரவு 12 மணி அளவில் திடீரென தீப்பிடித்து புகை வந்தது.
சேலம்:
சேலம் அரிசிபாளையம் துரைசாமிபுரத்தில் தனியாருக்கு சொந்தமான மசாலா குடோன் செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் நேற்று இரவு 12 மணி அளவில் திடீரென தீப்பிடித்து புகை வந்தது. இதை அக்கம் பக்கத்தினர் பார்த்து பள்ளப்பட்டி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார், செவ்வாய்பேட்டை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் தண்ணீர் பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த விபத்தில் ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.
இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.