உள்ளூர் செய்திகள்

மீனவர்கள் வலையில் சிக்கிய நண்டுகள்.

அதிக அளவில் மீன் கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி

Published On 2022-11-26 06:57 GMT   |   Update On 2022-11-26 06:57 GMT
  • அதிகளவில் காலா மீன், வாவல், நிலக்கால் நண்டு, புள்ளி நண்டு, இறால் உள்ளிட்ட மீன்கள் கிடைத்துள்ளன.
  • மீன்களை வெளி மாவட்டங்களுக்கு அனுப்பும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

வேதாரண்யம்:

நாகை மாவட்டம் வேதா ரண்யம் கோடியக்கரையில் அக்டோபர் மாதம் முதல் மார்ச் வரை மீன்பிடி சீசன் காலமாகும்.

தற்போது பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் கோடியக்கரையில்யில் தாங்கி மீன் பிடித்து வருகின்றனர்.

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக 10 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாத நிலையில் நேற்று இரவு மீன் பிடிக்க சென்ற கோடியக்கரை மீனவர்களது வலையில் அதிக அளவில் காலாமீன், வாவல், நிலக்கால் நண்டு, புள்ளி நண்டு, இறால், உள்ளிட்ட மீன்கள் கிடைத்துள்ளன.

இதனால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மேலும் காலா மீன் கிலோ ரூபாய் 500, வாவல் மீன் ரூ. 700, இறால் ரூ. 200,நீலக்கால் நண்டு ரூ. 700, புள்ளிநண்டு ரூ.200க்கும், ஏலம் போயின.

ஒரே நாளில் 5 டன்மீன்கள் கிடைத்ததாலும் அதற்கு நல்ல விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மீன்களை வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஐஸ் வைத்து அனுப்பும் பணியில் வியாபாரிகள் ஈடுபட்டுள்ளனர். 

Tags:    

Similar News