உள்ளூர் செய்திகள்

தொழில் நல்லுறவு விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Published On 2022-10-14 10:23 GMT   |   Update On 2022-10-14 10:23 GMT
  • நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்பு குழு தேர்ந்தெடுக்கும்.
  • தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி தொழிலாளர் உதவி ஆணையர் (சமரசம்) மாதேஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

வேலை அளிப்பவர்கள் மற்றும் தொழிலாளர்கள் இடையே தொழில் அமைதியும், நல்ல தொழில் உறவு நிலவுவதையும் ஊக்குவிக்கும் பொருட்டு தமிழ்நாடு அரசு - தொழில் நல்லுறவு பரிசுத் திட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. நல்ல தொழில் உறவினை பேணிப்பா துகாக்கும் வேலையளிப்பவர்கள் மற்றும் தொழிற் சங்கங்களுக்கு 2017, 2018, 2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான சிறப்பு விருதுகளை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியின் தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு முத்தரப்பு குழு தேர்ந்தெடுக்கும்.

இந்த விருதுக்குரிய விண்ணப்பப்படிவங்களை தொழிலாளர் துறையின் வலைதளத்திலிருந்து (http://labour.tn.gov.in)பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். அல்லது இந்த விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்திலுள்ள தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகம், தொழிலாளர் துணை ஆணையர் (சமரசம்) அலுவலகம், வட்டார தொழிலாளர் இணை ஆணையர் அலுவலங்கள், தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர் அலுவலகங்கள் மற்றும் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாத்திலுள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம்.

ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடனும், விண்ணப்பக் கட்டணம் செலுத்திய விவரத்தினையும் இணைத்து, சென்னை தொழிலாளர் ஆணையர் அலுவலகத்திற்கு வருகிற நவம்பர் மாதம் 11-ந் தேதிக்குள் அனுப்பி வைக்கப்பட வேண்டும். ஒவ்வொரு விண்ணப்பத்துடனும், விண்ணப்பக் கட்டணமாக விண்ணப்பித்தவர்கள் தொழிற் சங்கமானால் ரூ.100-ம், வேலையளிப்பவரானால் ரூ.250-ம் 0230-00 Labour and Employment 800 Other Receipts – AG Receipts of Labour Department (DP Code No.0230 00 800 AG 22799 என்ற தலைப்பின் கீழ் https://www.karuvoolam.tn.gov.in/challan/echallan வலைதளத்தில் இ-செலான் மூலம் தொகை செலுத்திய அசல் செலுத்துச் சீட்டு வைத்து அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News