உள்ளூர் செய்திகள்
காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
- ராகுலின் நடைப்பயணம் நேற்று நிறைவு பெற்றது.
- காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.
அரூர்,
காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி செப்டம்பர் மாதம் 7-ம் தேதி கன்னியாகுமரியில் முதல் ஜம்மு காஷ்மீரில் வரை நடைப்பயணம் மேற்கொண்டார். 12 மாநிலங்களில் 3,500 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற நடைப்பயணம் நேற்று நிறைவு பெற்றது.
இதனையடுத்து காங்கிரஸ் கட்சி சார்பில் அரூர் பேருந்து நிலையம், கச்சேரி மேட்டில் ஆகிய இடங்களில் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து காங்கிரஸ் கட்சி கொடியேற்றி வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
பின்னர் மகாத்மா காந்தியடிகளின் நினைவு தினத்தை ஒட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.