உள்ளூர் செய்திகள் (District)

பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் 

சென்னை விமான நிலையத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள தங்கம், மின்னணு பொருட்கள் பறிமுதல்- 4 பயணிகள் கைது

Published On 2022-07-22 23:00 GMT   |   Update On 2022-07-22 23:00 GMT
  • கொழும்பில் இருந்து வந்த பயணிகளிடம் இருந்து 2.573 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல்.
  • துபாயிலிருந்து சென்னை வந்த பயணிகளிடம் இருந்து 1.578 கிலோ எடைகொண்ட தங்கம் பறிமுதல்.

சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொழும்பிலிருந்து சென்னை வந்த இரண்டு விமானப் பயணிகளிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் உடலில் மறைத்து வைத்திருந்த 2.573 கிலோ எடையுள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1.13 கோடியாகும்.

இதேபோல் துபாயிலிருந்து சென்னை வந்த இரண்டு பயணிகளிடமிருந்து 1.578 கிலோ எடைகொண்ட தங்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.69.43 லட்சமாகும்.

மேலும் அவர்களிடமிருந்து ரூ.6.85 லட்சம் மதிப்புள்ள மின்னணு பொருட்களும் ரூ.1.30 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட்டுகளும் கைப்பற்றப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட மொத்த பொருட்களின் மதிப்பு ரூ.2.01 கோடியாகும்.

கடத்தலில் ஈடுபட்டதாக நான்கு பயணிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் கே ஆர் உதய்பாஸ்கர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News