உள்ளூர் செய்திகள் (District)

சிவகங்கை அருகே அரசு பேருந்து- லாரி மோதி விபத்து: 3 பேர் பலி

Published On 2023-04-03 08:18 GMT   |   Update On 2023-04-03 08:18 GMT
  • பூவந்தி அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.
  • சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சிவகங்கை:

சிவகங்கை, மதுரை தேசிய நெடுஞ்சாலையில் பூவந்தி அருகே அரசு பேருந்தும் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்தோரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதைத்தொடர்ந்து விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News