சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை குளிர்வித்த மழை
- சென்னையில் பிற்பகலில் கருமேகம் சூழ்ந்து கனமழை பெய்தது.
- இந்த மழையால் சென்னையில் குளுகுளுவென வானிலை மாறியது.
சென்னை:
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னையில் காலையில் வெயில் வாட்டி வதைத்தது. பிற்பகல் 3 மணி அளவில் கருமேகங்கள் சூழ்ந்து பகலை இரவாக்கியது. அதன்பின், கனமழை பெய்தது.
வேளச்சேரி, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, திருவல்லிக்கேணி, அடையாறு மயிலாப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் சென்னையில் குளுகுளுவென வானிலை மாறியது.
#WATCH | Tamil Nadu's Chennai witnesses heavy rain pic.twitter.com/22JkSAyP44
— ANI (@ANI) June 5, 2024